5 G. சேவை பற்றி அறிவோம் - Asianews

Latest

Tuesday 30 October 2018

5 G. சேவை பற்றி அறிவோம்


5ஜி என்பது ஜெனரேசன் என்கிற ஆங்கில சொல்லைக் குறிக்கும். அதாவது தலைமுறை! முதன்முதலாக அறிமுகமான 0ஜி அதாவது 0த தொலைத் தொடர்பு சேவைக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட ஒவ்வொரு தலைமுறை தொலைத் தொடர்பு சேவையும் தனித்தனி பெயரிடப்பட்டுக் குறிக்கப்பட்டன. உலக செல்பேசி கழக மாநாட்டில் 5த மிடுக்குப்பேசி அறிமுகமாகி இரண்டு ஆண்டுகளைக் கடந்து கொண்டிருக்கிறோம். 




இந்தியாவில் 4G இணையச் சேவை முதன் முதலில் வெளிவந்தபோது இருந்த பரபரப்பைவிட, ரிலையன்ஸ் தனது ஜியோ செறிவட்டைகள் மூலம் இலவச 4G சேவையை அறிமுகப்படுத்தியபோது ஏற்பட்ட பரபரப்பு தான் அதிகம். இந்தியா முழுவதும் தற்போது பத்து கோடி மக்களுக்கு மேல் ஜியோ செறிவட்டைகளை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். 4த என்பது மிக விரைவான இணையச் சேவை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இதற்கு முந்தைய 3த அல்லது அதற்கும் முன்னால் பயன்படுத்தப்பட்ட 2G இணையச் சேவைகளுக்கும், 4Gஇணையச்சேவைக்குமான வேறுபாட்டை தெரிந்து கொள்வோம் 






ஜி என்கிற ஆங்கில எழுத்தைக் கண்டதும் அனைவரும் அது இணைய வசதியைக் குறிக்கிறது என்றே நினைத்துக் கொள்வார்கள். ஆனால் அது அவ்வாறு இல்லை. முதன் முதலில் வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தப்பட்ட செல்பேசி சேவைதான் 1G சேவை. முப்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சேவையானது தொடரிமக் குறிகைகள் மூலம் ஒருவருடன் ஒருவர் கம்பி இல்லாமல் பேசும் வசதியை மட்டுமே உருவாக்கிக் கொடுத்தது. 




அமெரிக்காவில் இந்த சேவை அறிமுகமானபோது 2.4 முதல் 14.4 கேபிபிஎஸ் வேகத்தை மட்டுமே கொண்டதாக இருந்தது. அன்று இந்த 1த சேவையைப் பயன்படுத்திய செல்பேசிகள் அளவில் மிகப் பெரியதாகவும், குறைந்த மின்கல சேமிப்புத் திறனை மட்டுமே கொண்டதாக இருந்தன. பின்லாந்து நாட்டில் 27 ஆண்டுகளுக்கு முன்பு தான் முதன்முதலாக 2G சேவை தொடங்கப்பட்டது. முதன் முதலில் கம்பி இல்லாமல் இணைய வசதியைப் பயன்படுத்திய சேவை இதுதான். இதில் பேசியில் தொடர்பு கொண்டு பேசவும் செய்யலாம். 2G சேவையில் தான் சேதிகளை அனுப்பும் வசதி, படங்கள் மற்றும் காணொளியை அனுப்பும் வசதி எனப் பல சிறப்பம்சங்கள் அறிமுகமாகின. இன்று நாம் பயன்படுத்தும் அதிவேகமான இணையச் சேவைகளுக்கு விதை போட்டது இந்த 2த தான். இதில்தான் முதன் முதலாக செறிவட்டைகள் பயன்படுத்தப்பட்டன. இப்போதிருக்கும் இணைய வேகத்தோடு ஒப்பிடும்போது மிகக் குறைந்த வேகத்தை கொண்டு விளங்கியது 2G சேவை. 2G சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமானதையடுத்து, 





அதிக இணைய வேகத்தின் தேவை அதிகமானது. இதன் காரணமாக சைகைகளை சிறு கூறுகளாகப் பிரித்து அனுப்பும் 'பாக்கெட் ஸ்விட்சிங் முறை' அறிமுகப்படுத்தப்பட்டு, 3G சேவை உருவானது. 3G சேவையிலும் பல சிறப்பம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் இணைய வேகம் இன்னும் அதிகமாக இருந்தது. நம் இந்திய நாட்டுக்கு மிக தாமதமாக தான் 3G வந்து சேர்ந்தது கம்பி இல்லாத வேகமான இணையச் சேவையை உலகம் கண்டது 3த மூலமாக தான். 3த சேவையைவிட அதிக இணைய வேகம் கொண்டதாக மேம்படுத்தப்பட்டு 4G சேவை உருவானது. முதன்முதலாக 9ஆண்டுகளுக்கு முன்பு தென்கொரியாவில் இது அறிமுகமானது. அதிவேக இணைய வசதி, துல்லியமான காணொளி அழைப்புகள், நொடிப்பொழுதில் மின்அஞ்சல் அனுப்புவது என தொலைத் தொடர்பு உலகத்தையே மாற்றி அமைத்தது 4த சேவை. ஒரு நொடிக்கு 100 மெகா பைட் வேகம் வரை 4G சேவைகள் இன்று இயங்கி வருகின்றன. நேரடி செல்பேசி தொலைக்காட்சி என இணையம் மூலம் நினைத்துப் பார்க்க முடியாத சேவைகளை அளித்தது 4G சேவை. 4G சேவை தான் வந்துவிட்டதே, 





இனி இணைய உலகில் சாதிக்க என்ன இருக்கின்றது? என்று எண்ணுபவர்களுக்கு பல ஆச்சரியங்களுடன் வந்து விட்டது 5த சேவை. இச்சேவை அறிமுகமான பிறகு, இணையம் மூலம் நடக்கும் தகவல் பரிமாற்றத்தில் எழுபது விழுக்காட்டிற்கு மேல் காணொளியால் தான் நடக்குமாம். மேலும், அனைத்து தகவல்களும் 'முகில்' வசதியில் சேமிக்கப்படும். (அதென்ன முகில் வசதி என்பதற்கு இன்னுமொரு நீண்ட கட்டுரை தேவைப்படும்.) எனவே, நினைவகஅட்டை, பேனாஇயக்கி போன்ற சாதனங்கள் தேவையற்றுப் போகும். மேலும், கண்காணிப்பு படக்கருவிகள் மூலம் கண்காணிப்பு என்பது சில நொடிகளில் நடந்து முடியும். இதன்மூலம் தகவல் தொலைத் தொடர்பில் ஒரு புதிய சாதனையே நிகழ்த்தப்படும் என எதிர்பார்க்கலாம். -

No comments:

Post a Comment